வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்
உப்பு சத்யாகிரகம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற் றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். அண்ணல் காந் தியடிகள் தண்டியாத்திரையும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் வேதாரணியம் உப்பு யாத்திரையும் மேற்கொண்டு இந்த 2005 ஆண்டோடு 75 ஆண்டுகள் நிறைவு பெறு கின்றன.
தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் தளபதி சர்தார் வேதரத்னம் முன்னின்று நடத்திய வீர வரலாறு தான் வேதாரண்யம் உப்பு யாத்திரை. நூறு ஒழுக்க சீலர்கள் இந்த அஹிம்சைப் போரில் கலந்துகொண்டார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு.ஏ.என். சிவராமன் (தின மணி ஆசிரியராக இருந்தவர்), திரு.ஜி. ராமசந்திரன், திரு. துரைசாமி, கல்கி சதாசிவம், கோயம்புத்தூர் ராஜ÷, கோவை ஜி.கே. சுந்தரம், ஒ.வி. அளகேசன், வெங்கட்ராமன், கே. சந்தானம், மட்டப்பாறை வெங்கட்ட ராமையா இன்னும் பலர்.1929 இல் லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூடியது. பூரண சுதந்திரமே லட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த லட்சியம் கை கூடுவதற்காக எந்த மாதிரி கிளர்ச்சி நடத்தலாம் என்று யோசனை கூறும் பொறுப்பு காந்திஜிக்கு விடப்பட்டது
ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 4 மணிக்கு குறிப்பிட்ட சிலரோடு ராஜாஜி உப்பை அள்ளிச் சென்றுவிட்டார்.டெபுடி கலெக்டர் பொன் னுசாமிப் பிள்ளை, கோவிந்த மேனன் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் போலீஸ்காரர்கள் ராஜாஜி வருகைக்காகக் காந் திருந்த போது, வேறுவழியாகச் சென்று தன் மதிநுட்பத்தால் ராஜாஜி உப்பை அள்ளி வந்து விட்டார். ""காந்திக்கு ஜெ! வந்தே மாதரம்'' கோஷங்கள் எழுப்பப் பட்டவுடன் ராஜாஜியும் வேறு சிலரும் கைதாகி 6 மாத சிறை தண்டனை அனுபவித்தார்கள்.
வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகம்
Posted by
Vedamoorthi
Labels:
உப்பு சத்யாகிரகம்,
ராஜாஜி,
வேத ரத்தினம் பிள்ளை
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment